Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வருகிற 25/11/2023 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை, இராசிபுரம், காக்காவேரி, முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம், தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுங்கள்.
8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்ய விருப்பமுள்ள வணிகர்கள் ராம்குமார், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களை 94440 94322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தினை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.